June 13, 2025 5:00:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 24 ஆம் திகதி முதல் தடுப்பூசி

இலங்கையில் 12 – 19 வயதுக்கு இடைப்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் செப்டம்பர் 24 முதல் ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்படி உடல் உபாதைகளுக்கு உள்ளான மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கும் செயல்முறை கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கையில் பைசர் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் மே மாதம் ஒப்புதல் அளித்தது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைப்படி, பைசர் தடுப்பூசி கொவிட் தொற்றுக்கு எதிராக 95% செயல்திறன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.