October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று, எதிர்க்கட்சி உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

”உயர்தர மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க வேண்டும். உயர்தரப் பரீட்சையின் முக்கியத்துவம் தொடர்பில் அறிந்து அது தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்” என்று சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன, ”இது குறித்து ஜனாதிபதி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு என்பன கலந்துரையாடி உயர்தர மாணவர்களுக்கு முதலாவதாக பைசர் தடுப்பூசியை வழங்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.