July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெலிக்கடை சிறைக் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது!

தண்டனைக் குறைப்பை வலியுறுத்தி கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

தமது தண்டனையை குறைக்குமாறு வலியுறுத்தி ஆயுள் தண்டனைக் கைதிகள் 10 பேர், நேற்று பிற்பகல் முதல் சிறைச்சாலையின் கூரையின் மீதேறி சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

எவ்வாறாயினும், கைதிகளின் கோரிக்கைக்கு சாதகமான தீர்வை வழங்க தமது திணைக்களத்திற்கு அதிகாரம் இல்லை என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கைதிகள் தொடர்ந்தும் கூரையில் இருந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அவர்களை கூரையில் இருந்து கீழே இறக்க முயற்சித்து வரும் சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.