May 31, 2025 15:59:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

’லொஹான் ரத்வத்தவை கைது செய்வதில் காலதாமதம்’

இரண்டு சிறைச்சாலைகளுக்குள் நுழைந்து கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் பதவி விலகியுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு காலதாமதம் ஏற்படுவதாக சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக விரைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், இது தொடர்பில் தாம் சி.ஐ.டி.யில் முறைப்பாடு செய்துள்ள போதிலும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடர உள்ளதாகவும், கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்று ஒருவாரமாகிறது எனவும் அவர் இதன்போது எடுத்துரைத்தார்.