July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் மரணம்!

நுவரெலியா மாவட்டத்தின் நோட்டன் பிரிட்ஜ் – லொனக் பாற்பண்ணைக்கு அருகிலுள்ள நீர்த் தேக்கத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய சின்னையா ராஜா, புத்தளம் ஹலாவத்தை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய சச்சிந்த தில்ஷான் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நீர்த் தேக்கத்தில் நேற்று மாலை ஐந்து இளைஞர்கள் நீராடச் சென்றுள்ள நிலையில். அவர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னையா ராஜா என்ற இளைஞன் நீரில் மூழ்கியபோது, சஜிந்த டில்சான் என்பவர் அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட வேலையில் இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன நிலையில், இன்று காலை அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் கட்டட நிர்மாண பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.