July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“லொஹான் ரத்வத்த தொடர்பில் கருத்து தெரிவிப்பது குற்றமாகும்”; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

இராஜாங்க அமைச்சர் லொஹான்  ரத்வத்தவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணையின் அறிக்கைகள் கிடைக்கும் வரை அது குறித்து கருத்து தெரிவிப்பது குற்றமாகும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை ஏற்புடையது என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் கூறினார்.

முன்னாள் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் தூக்கு மேடையை பார்வையிட செல்வதற்கு லொஹான் ரத்வத்தவுக்கு அதிகாரம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“பதவியில் இருக்கும் போது ஏதாவது தவறு நடந்தால் ஏனைய நாடுகளில் உள்ள அமைச்சர்கள் இராஜினாமா செய்கிறார்கள்.நமது நாட்டில் அப்படி அல்ல.எனினும் லொஹான் ரத்வத்த ராஜினாமா செய்ததோடு மட்டுமன்றி, சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்” என்றார்.

இதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எந்த அளவிற்கு நீதியாக நடந்து கொள்கின்றது என்பது தெளிவாகிறது எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார்.