July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெர்ணான்டோ கைது!

தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் ஹம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெர்ணான்டோ, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றுக்குள் புகுந்து, அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் இருவர் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே எராஜ் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பம்பலப்பிட்டி பொலிஸார், சந்தேக நபரான ஹம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெர்ணான்டோவை இன்று காலை கைது செய்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட அவர், விசாரணைகளை தொடர்ந்து பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.