June 13, 2025 16:21:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் பிரச்சினை அரசால் புறக்கணிப்பு; சஜித் குற்றச்சாட்டு

பொதுமக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாமல் அரசு செயற்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

“விவசாயிகள் விவசாயத்தை விட்டு விலகிச் செல்வதைத் தடுக்கவும்,விவசாயிகளின் சீரழிந்து வரும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உடனடித் தீர்வுகளை அரசு வழங்க வேண்டும்.

உழவர் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இந்த அரசால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கொரோனா தொற்று நோயுடன் போராடும் உலகின் பல நாடுகள் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துள்ள போதிலும் இலங்கை அரசு இரண்டையும் புறக்கணித்துள்ளது”என்று அவர் மேலும் தெரிவித்தார்.