July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை-சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இந்த விமான சேவையை சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் இந்த சேவை மீண்டும் அமுலுக்கு வரவிருக்கிறது.கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வாரத்தின் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.