
ஜனநாயகத்தை மீறி செயற்படுகின்ற நாடுகளுடன் இலங்கையும் இணைத்து பயணிக்கிறதா? என்று எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த அறிக்கையில், மனித உரிமைகள் மீறப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக உலகத்தோடு பயணத்தை தொடர்வதா? அல்லது ஜனநாயகத்தை இழந்து, ஜனநாயகத்தை மீறி செயற்படுகின்ற நாடுகளுடன் இணைத்து பயணிப்பதா? என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னரைப் போன்று ஜிஎஸ்பி வரிச் சலுகையை இழக்கும் நிலைக்கு இலங்கை பயணிக்கத் தேவையில்லை என்று இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.