October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொஸ்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 வயது இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், காலை 6 மணியளவில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர் என்றும், இவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய கொரோனா தொற்றாளர் கைது

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொஸ்கம மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய 26 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொரளை பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.