![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/09/210065738_1981083585383519_7461225683918529744_n-e1631695729723.jpg?fit=960%2C633&ssl=1)
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக லொஹான் ரத்வத்த மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இராஜினாமா செய்துள்ளார்.
தனது அமைச்சு தொடர்பில் ஊடகங்களில் பரப்பப்படும் செய்தியைத் தொடர்ந்து, அரசாங்கத்தை இக்கட்டுக்குள் தள்ளாமல் இருப்பதற்காக இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக தன்னை நியமித்தமைக்கு லொஹான் ரத்வத்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தள்ளது.