July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்துக்கு ஐநா வதிவிட பிரதிநிதி கண்டனம்

அனுராதபுரம் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதியில் அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்துக்கு இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஐநா வதிவிட பிரதிநிதி டுவிட்டர் செய்தியொன்றையும் வெளியிட்டுள்ளார்.

மன்டேலா விதிகளுக்கு அமைய சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதை ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐநா இலங்கை அலுவலகத்தின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் போதைப்பொருளில் இருந்து புனர்வாழ்வளிக்கும் திட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதும் முக்கியமான அம்சம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைக் கைதிகள் மோசமாகப் பராமரிக்கப்படுவதை ஐநா இலங்கை அலுவலகம் கண்டித்துள்ளது.