February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை தொடர்பான அறிக்கை ஐநா பேரவையின் கொள்கைகளை மீறுவதாகும்’: கலாநிதி பிரதிபா மஹாநாம

இலங்கை தொடர்பான அறிக்கை ஐநா மனித உரிமைகள் பேரவையின் கொள்கைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக கலாநிதி பிரதிபா மஹாநாம குறிப்பிட்டுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வில் ஆணையாளர் மிச்செல் பெச்செலெட் இலங்கை தொடர்பாக குறிப்பிட்ட தகவல்களில் அதிகமானவை, குறித்த பேரவையின் குறிக்கோள்களை தாண்டிச் செல்வதாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐநா ஆணையாளரின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை உரிய விதத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கலாநிதி பிரதிபா மஹாநாம கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து, பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.