October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு!

(File Photo)

கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து இன்று (14) கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.நிஹால் தல்துவ தெரிவித்தார்.

வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறையொன்றிலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த கைக்குண்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கைக்குண்டு மீட்கப்பட்ட மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.