July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் பந்துலவின் கருத்து தொடர்பில் அரசாங்கம் பதில்!

ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுவோரிடம் 5 வீத வரியை அறவிட வேண்டும் என, அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ள கருத்து அவரின் தனிப்பட்ட நிலைப்பாடே என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் பந்துல குணவர்ன, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக சேவைகளை நடத்திச் செல்வதற்காக, நாட்டில் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுவோரிடம் 5 வீத வரியை அறவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர், அமைச்சர் பந்துல குணவர்தனவின் இந்த கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடா? என்று கேட்டார்.

இதன்போது பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அந்த கருத்தானது அவரின் தனிப்பட்ட கருத்தே ஆகும். இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவும் இல்லை. அவ்வாறான யோசனை முன்வைக்கப்படவும் இல்லை என்றார்.