October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகிறார் ஜயந்த கெட்டகொட

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ள இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை இன்று பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 16 ஆம் திகதி அஜித் நிவாட் கப்ரால் மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதும், வெற்றிடமாகும் ஆசனத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே ஜயந்த கெட்டகொட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக பதவி வகித்த நிலையில், பஸில் ராஜபக்‌ஷவுக்கு தனது ஆசனத்தை வழங்கி கடந்த ஜுலை மாதத்தில் பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.