File Photo
பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவங்கொட, உடுகம்பொல பகுதியில் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமற்போயுள்ளார்.
சுகவீனமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, இவர் காணாமற்போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.