June 13, 2025 12:24:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான 50 வீத விண்ணப்பங்கள் கூட கிடைக்கப் பெறவில்லை!

இந்த ஆண்டு க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு பரீட்சைகளுக்கான தோற்றும் மாணவர்களின் 50 வீத விண்ணப்பங்கள் கூட இதுவரை கிடைக்கப் பெறப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை அதிபர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் அனுப்பி வைக்க வேண்டும். எனினும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பெரும்பாலான அதிபர்கள் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை அனுப்பவில்லை எனவும் தெரிய வருகின்றது.