February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப ஐந்தாண்டு வேலைத்திட்டம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்ட சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப ஐந்தாண்டு வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சமீபத்தில் உக்ரைனுக்கு சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர், உக்ரைனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் சுற்றுலாத்துறை சார்ந்த அமைப்பாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற இக்காலத்தில் இலங்கை முன்னெடுத்திருந்த சுற்றுலா திட்டத்திற்கு உக்ரைன் அளித்த ஒத்துழைப்புக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது பாராட்டுகளைத் தெரிவித்தார்.