June 15, 2025 10:03:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி தீபங்கள் ஏற்றும் நிகழ்வு

சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி தீபங்கள் ஏற்றும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

குருநகரிலுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இருட்டுக்குள் இருக்கின்ற அரசியல்கைதிகளின் வாழ்வில் ஒளியூட்டுவதை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.