July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி வீட்டில் சடலமாக மீட்பு!

File Photo

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த மரணம் எப்படி நேர்ந்தது என்று கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மன அழுத்தம் காரணமாக மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.