July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உடனடியாக இராஜினாமா செய்து மக்கள் ஆணையை கோருங்கள்; நாட்டை வழிநடத்த நாங்கள் தயார் என்கிறார் சஜித்

உடனடியாக இராஜினாமா செய்து,மக்கள் ஆணையை கோருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில்,அரசாங்கம் மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதாக தெரிவித்து வருகிறது.எனவே ஒருவர் மீது குற்றஞ்சாட்டுவதை விடுத்து, உடனடியாக அரசாங்கம் பதவி விலகி தேர்தலொன்றை நடத்துங்கள்.

இதன்படி,யார் நாட்டில் ஆட்சிபுரிய வேண்டுமென்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.நாடு தற்போது மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. எவ்வாறாயினும் நாட்டை வழிநடத்த எதிர்க்கட்சியாகிய நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனவும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய ,தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற, திறமையற்ற மற்றும் முறையான கொள்கை இல்லாமையே நாடு நாளுக்கு நாள் பாதாளத்தை நோக்கி செல்வதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்,இந்த அரசாங்கத்திற்கு நாட்டை மீட்டெடுப்பதற்கான திறன் இல்லையெனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.