April 21, 2025 10:13:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறார் அஜித் நிவாட் கப்ரால்

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது உறுதியாகியுள்ளது.

அவர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்ற செயலாளரிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு அஜித் நிவாட் கப்ரால் மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளதோடு, அவரும் அதற்குத் தயார் என்று அறிவித்திருந்தார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் பேராசிரியர் டபில்யு.டி. லக்ஸ்மன் இம்மாதம் 14 ஆம் திகதி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்டுள்ளார்.