July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி ஏற்றியதாகக் கூறி அட்டையை பெற முயற்சித்த நால்வர் கைது!

கொரோனா தடுப்பூசி ஏற்றியதாக அட்டையில் பதிவு செய்து கொண்டு தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாமல் வெளியேறிய பெண்கள் மூவர் உட்பட நான்கு பேரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (09) காலி – சங்கமித்தா வித்தியாலயத்தில் தடுப்பூசி செலுத்தும் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

அங்கு சென்ற குறித்த சந்தேக நபர்கள், கொரோனா தடுப்பூசி ஏற்றியதாக அட்டையில் பதிவு செய்து கொண்டு தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாமல் வெளியேறுவதை அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி அவதானித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர்களை தடுத்து வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தடுப்பூசி ஏற்றியதாக அட்டையில் பதிவு செய்து கொண்டு வெளியேறியமை தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் முதல் டோஸைப் பெற்றுக் கொள்ளவும் இவ்வாறான அணுகுமுறையைத் தான் பின்பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, விசாரணைகளின் பிறகு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.