![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/09/ruu.jpg?fit=960%2C720&ssl=1)
இலங்கையின் விவசாயத்துறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படுமென பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மற்றும் பிரான்ஸின் விவசாய ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்காக ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற நிறுவனங்களுக்கு உதவியை பெறும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேவேளை, இந்த சந்திப்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிஷாந்த பத்திராஜா மற்றும் பிரான்ஸுக்கான இலங்கை தூதர் பேராசிரியர் க்ஷனிகா ஹிரிம்புரேகம ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த அமைப்பு வெப்ப மண்டல மற்றும் மத்திய தரைக்கடலின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.