July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். உடுப்பிட்டி கிராமத்திற்கு இராணுவப் பாதுகாப்பு!

file photo

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து, அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய அந்த கிராமத்திற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல், கடந்த சில நாட்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்த மோதலுடன் தொடர்புடைய சிலர் தலைமறைவாகிய நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸாரின் அழைப்பின் பேரில் நேற்று இரவு முதல் இராணுவதினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.