July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“தொழில்நுட்ப நிபுணர் குழுவிலிருந்து விலகிய வைத்தியர்கள் தொடர்ந்தும் தமது பங்களிப்பை வழங்குவார்கள்”

கொவிட் தொழில்நுட்ப நிபுணர் குழுவில் இருந்து மூன்று மருத்துவர்கள் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள போதிலும் தொடர்ந்தும் சுகாதாரத் துறையில் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்த சுயாதீன நிபுணர் ஆலோசனை குழுவில் 8 உறுப்பினர்கள் இருந்தனர்.

முன்னதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மலவிகே, தமது தனிப்பட்ட காரணங்களால் குழுவில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இந்தக் குழுவிலிருந்து,பேராசிரியர் ரஜீவ டி சில்வா, பேராசிரியர் காந்தி நாணயக்கார மற்றும் பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோரே ஜூலை மாதம் அளவில் இராஜினாமா செய்திருந்தனர்.

தற்போது, குறித்த குழுவில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம மற்றும் விசேட வைத்தியர் அசோக குணரத்ன அறிவித்துள்ளார்.

இந்த நிபுணர் குழுவின் பணி உலகின் பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தடுப்பூசி குறித்த உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்வதும், இலங்கையில் தடுப்பூசி வேலைத் திட்டத்தை பரிந்துரைப்பதும் ஆகும்.