October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையின் தற்போதைய நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை’: சுகாதாரத்துறை

இலங்கையின் தற்போதைய கொரோனா தொற்று நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமன்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்குத் தேவைகளை முன்னேற்பாடுகளை கல்வி அமைச்சு மேற்கொண்ட பின்னரே, பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கிய பின்னரே உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும் என்று சுகாதார தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

முக்கியமான பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டங்களை பல்வேறு நாடுகளும் ஆரம்பித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.