June 15, 2025 19:25:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாயை திருடி அடகு வைத்தவர்கள் கைது!

File Photo

பலாங்கொடை பிரதேசத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாயை திருடிச் சென்று 7,500 ரூபாவுக்கு அடகு வைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பலாங்கொடை – கிரிமெட்டிதென்ன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது லெப்ரடோர் வகையைச் சேர்ந்த குறித்த நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட நபர்கள் நேற்று (07) பலாங்கொடை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.