July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வை செப்டம்பர் 16,17,18 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த போதும், நாட்டில் தற்போது நிலவும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு அதனை ஒக்டோபர் 7,8,9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக் குழு இன்று காலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் கூடியது.

தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராய்ந்த குழு, நாட்டின் சூழ்நிலையைக் கருத்தில் பட்டமளிப்பு விழாவை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.