June 16, 2025 10:33:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீனை செப்டம்பர் 21 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ரிஷாட் பதியுதீன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு ரிஷாட் பதியுதீன் உதவியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரிஷாட் பதியுதீன் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.