July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் தமது மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்கக் கோரி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்றைய தினம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

முற்பல் 9 மணி தொடக்கம் 11 மணி வரை குறித்த போராட்டம் இடம்பெற்றது.

தற்போதைய கொரோனா காலப்பகுதியில் தமது சாதாரண கடமையை விட தற்போது அதிக நேரம் கடமையாற்றுவதாகவும், குறிப்பாக அன்டிஜன், பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை பராமறித்தல் உள்ளிட்ட மேலதிக கடமைகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இதுவரை தமக்கான மேலதிக நேர கொடுப்பனவை வழங்கவில்லை என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம், தமது மேலதிக நேர கொடுப்பனவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, கோரிக்கை அடங்கிய மகஜரை வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் வகையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளித்தனர்.

இதன் போது மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேகைள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளனர்.

 

This slideshow requires JavaScript.