July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக மீண்டும் பதவியேற்க கப்ரால் தயாராகிறார்?

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், மீண்டும் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக அவர் விரைவில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த செய்தி குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, இது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.