July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மிலிந்த மொரகொட தொடர்பான செய்தி குறித்து இந்தியத் தூதரகம் அறிக்கை!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட பற்றி வெளியான செய்திகளில் எந்த உண்மையுமில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மிலிந்த மொரகொடவை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே,இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மிலிந்த மொரகொடவினால் வழங்கப்பட்ட நியமனச்சான்றிதழை இந்தியா நிராகரித்தது என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

எனினும், இந்த செய்திகளில் உண்மையில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.