July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் முறையிடலாம்!

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வருமானம் இழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது தொடர்பில் முறையிட முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும், இதுவரை அதனை பெறாதவர்கள் தாம் வசிக்கும் பகுதியின் மாவட்ட அரசாங்க அதிபர்கள் அல்லது பிரதேச செயலாளர்களிடம் முறையீட்டு பத்திரத்தை சமர்ப்பிக்க முடியும் என வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

வருமானம் இழந்தவர்களுக்கான  2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் 100 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.

இந்த கொடுப்பனவு 24 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்தச் செயலணி மேலும் கூறியுள்ளது.