July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடிப்படைவாத கொள்கையுடைய நபர்களை அடையாளம் காட்டுமாறு பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள்

நாட்டில் அடிப்படைவாத கொள்கையுடையவர்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக பாதுகாப்பு பிரிவினரிடம் வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடிப்படைவாத கொள்கைகளை உடையவர்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிரமாக தேடி வருவதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சிந்தனை உடையவர்களை கண்டறிய பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அடிப்படைவாத கொள்கைகள் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு, அது நாட்டிற்கும் சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தனிநபர்கள் மற்றும் சில அமைப்புகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.