July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுமி ஹிஷாலினி மரணம்; ரிஷாட் உட்பட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி மற்றும் மாமனாரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் இன்று (06) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி வந்த ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.