July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொழும்பு, பேலியகொட மீன் சந்தைக்கு கடந்த வாரத்தில் பொதுமக்கள் யாரேனும் சென்றிருந்தால், உடனடியாக அண்மையில் இருக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த மீன் சந்தையில் நேற்றைய தினம் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடந்து, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா பொதுமக்களுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

மேலும் நேற்று முதல் பேலியகொட மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்திற்கும் கொழும்பில் சில பிரதேசங்களுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.