June 14, 2025 22:59:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு தீவிரம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்றைய தினம் நடைபெறும் நிலையில், ஆலய வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திருவிழா நடைபெறுவதால் தேர் உற்சவத்தினை தரிசிக்க அடியவர்கள் ஆலயத்திற்கு வருவதை தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் ஆலய வளாகத்தில் அடியவர்கள் ஆலய வளாகத்தில் வராதவாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்

ஆலய உற்சவத்தின் போது அமைக்கப்படும் வீதித் தடைகளை தாண்டி யாரும் உட் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அத்தோடு ஆலயத்திற்கு முன்பாக பொலிசாரின் பஸ் ஒன்று வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.