July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொப்பிகலயில் அநுராதபுர யுக பௌத்த விகாரையின் தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிப்பு!

இலங்கை தொப்பிகல, நரகமுல்ல பகுதியில் அநுராதபுர யுகத்தை சேர்ந்த பௌத்த விகாரையொன்றின் தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது இந்த தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்படும் விகாரை தொகுதியில் இருந்து 16 கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

கி.மு. 205 -167 காலப்பகுதியில் இலங்கையின் உருகுணை பகுதியை ஆண்ட காவன்திஸ்ஸ மன்னனினால் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பிலான கல்வெட்டும் இதில் அடங்குகிறது.

இந்த விகாரை தொகுதியில், சிறிய தூபி, புராதன கட்டிடம், புராதன கற்கள் மற்றும் சேதமடைந்துள்ள சிலையும் மீட்கப்பட்டதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், இராணுவம் மற்றும் தொல்பொருள் முதுகலை பட்டப்படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டோர் இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.