July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 20-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான அறிவிப்பு!

Vaccinating Common Image

இலங்கையில் மேல் மாகாணம் மற்றும் காலி மாவட்டத்தில் 20-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு அடுத்த வாரத்தில் கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

20-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் தடுப்பூசி மையங்களின் விவரங்களுடன் கூடிய உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ரம்புக்வெல்ல கூறினார்.

20-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த புதன்கிழமை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் இந்த நடவடிக்கையை திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை தொடங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கூறினார்.

இதனிடையே சீனாவிடம் இருந்து நான்கு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை (05) இலங்கை வர உள்ளன.

இதனை எடுத்து வருவதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று பெய்ஜிங் விமான நிலையம் சென்றுள்ள நிலையில், நாளை காலை  நாட்டை வந்தடைய உள்ளது.