July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திஸ்ஸமஹாராம பகுதியில் வழமைக்கு மாறாக உயிரிழக்கும் நாய்கள் மற்றும் பருந்துகள்!

திஸ்ஸமஹாராம, யோதவெவ சந்தகிரிகமவில் பருந்துகள் மற்றும் நாய்கள் அசாதாரணமான முறையில் உயிரிழந்துள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வழமைக்கு மாறாக இப்பகுதியில் இதுவரை 20 முதல் 25 நாய்கள் இறந்துள்ளதோடு, பருந்துகளும் இறந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே பகுதியில் அனுமதியின்றி பன்றிகள் பண்ணை ஒன்றை நடத்தி வருபவரால் தமது வளர்ப்பு விலங்குகளுக்கு தீங்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஏனைய விலங்குகளுக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.