June 17, 2025 19:10:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்தியவர் தொடர்பான தகவல்களைக் கோரியது இலங்கை

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் நியூசிலாந்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சு இந்த தகவல்களைக் கோரியுள்ளது.

நேற்று நியூசிலாந்தின் ஒக்லன்ட் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் 6 பேர் மீது இலங்கையர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

கத்திக்குத்துக்கு உள்ளான மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை நடத்தியவர் 2016 ஆம் ஆண்டில் இருந்து பொலிஸ் கண்காணிப்பில் இருந்ததாகவும், தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர் என்று ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரை பொலிஸார் பின்தொடர்ந்ததால், ஒரு நிமிடத்தில் பதிலளிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், நியூசிலாந்தில் தாக்குதலை நடத்தியவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.