July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பருத்தித்துறையில் வீடொன்றில் தீ விபத்து!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அண்மையில் உள்ள மேல்மாடி வீடொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த தீ விபத்து இடம்பெற்ற வீட்டில் உள்ள பெண், சுவாமி அறையில் விளக்கேற்றிவிட்டு ஆலயம் சென்று திரும்பிய நிலையில் விளக்கிலிருந்து வீட்டிக்குள் தீ பரவியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர தீயணைப்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தற்போது தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

This slideshow requires JavaScript.