October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற அமர்வை 6,7 ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானம்

பாராளுமன்ற சபை அமர்வை எதிர்வரும் 6, 7 ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை(02) இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

திங்கட்கிழமை (06) விசேட பாராளுமன்ற தினமாக கேள்விகளுக்கு பதில் வழங்குவதற்கு முன்னர் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால விதிமுறைகள் தொடர்பில் அன்றைய தினம் விவாதிக்கப்படவுள்ளதாக இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.