July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஹ்ரானின் மனைவி உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், சஹ்ரான் ஹாசீமின் மனைவி ஆஜராகியுள்ளார்.

அவரிடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசீம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் விசாரணைகள், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப அறையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.