ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ஆலமரம் வேரோடு வெட்டப்பட்டாலும் மீண்டும் அது உறுதியாக கட்டியெழுப்பப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 வது ஆண்டு விழாவையொட்டி அவரது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள விசேட காணொளி ஒன்றின் ஊடாக இதனை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆலமரம் பிறக்கும் போது தான் உயிரோடு இருப்பேனா என்பது தெரியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், மரத்திற்கு வலிமை தரும் ஒரு இளம் தலைமுறையை உருவாக்க உதவுவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்றிலுமாக அழிக்க முடியாது என்றும், வலுவான அடித்தளம் மற்றும் தூய்மையான பார்வை கொண்ட ஒருசில பெரிய மனிதர்களின் இரத்தத்தால் குறிக்கப்பட்ட வரலாறு கொண்ட ஒரு கட்சியை அழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.