July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை கொழும்பு போர்ட் சிட்டியில் நிறுவ அரசாங்கம் தயார்

சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை கொழும்பு போர்ட் சிட்டியில் நிறுவுவதற்கு வசதிகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சீன சபாநாயகருடனான இணையவழி சந்திப்பில் உரையாற்றும் போதே, நிதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் போர்ட் சிட்டியின் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு சீனாவின் ஒத்துழைப்பு அவசியம் என்று பஸில் ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு போர்ட் சிட்டி மற்றும் ஏனைய முதலீட்டு நடவடிக்கைகளுக்கு தாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பதாக சீன சபாநாயகர் தெரிவித்துள்ளார்.