July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பதுக்கப்பட்ட 29,900 மெட்ரிக் தொன் சீனி அரசின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது

களஞ்சியசாலைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 29,900 மெட்ரிக் தொன் சீனி முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவை அரசுடமையாக்கப்பட்டதாக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்தார்.

இந்த சீனித் தொகை கட்டுப்பாட்டு விலையில் அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களின் ஊடாக நுகர்வோர் பெருமக்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.5667ஒரு கிலோகிராம் சீனிக்காக அறவிடப்பட்ட 50 ரூபாய் என்ற இறக்குமதித் தீர்வை வரியானது, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், 2020 ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் 25 சதமாக குறைக்கப்பட்டது. அன்றைய நாளில்,நாட்டுக்குள் 88,878 மெட்ரிக் தொன் சீனி காணப்பட்டது.

56592020 ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் 2021 ஜூன் 30ஆம் திகதி வரை, 584,000 மெட்ரிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. உள்நாட்டின் மாதாந்த சீனித் தேவையின் அளவு 35,000 மெட்ரிக் தொன் ஆகும்.

இருப்பினும்,வருடாந்த சீனித் தேவைக்கு மேலதிகமாக சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.நாட்டுக்குள் சீனிக்கு தட்டுப்பாடு நிலவுவதான மாயையை உருவாக்கி நுகர்வோரைச் சிரமத்துக்கு உட்படுத்தி,அதிக விலைக்கு சீனியை விநியோகிக்கும் முயற்சியொன்று,கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டமையை காணக்கிடைத்தது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2 ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் அக்கட்டளைச் சட்டத்தின் ii ஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5 ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள்,2021-08-30 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதன் பிரகாரம், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமித்து சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்கு தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்பு செய்வதற்கான அதிகாரங்களை அவருக்கு வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீனியைக் கண்டுபிடிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கண்டறியப்படும் சீனித் தொகையை, கட்டுப்பாட்டு விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.